ரசிகருடன் ஓடி விளையாடி கட்டியணைத்த டோனி…

இந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி பந்து வீச களத்தில் இறங்கியது, அப்போது ரசிகர் ஒருவர் டோனியை நோக்கி ஓடி வந்தார். இதை பார்த்த டோனி, அங்கும், இங்கும் ஓடி இறுதியில் அந்த ரசிகரை கட்டியணைத்தார். இந்த சம்பவம் ஆடுகளத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அந்த ரசிகர் No.7 Thala என்ற T-Shirt-யை அணிந்திருந்தார்.

Exit mobile version