8 மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை

கோவையில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 8 மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகளுடன், டிஜிபி ஜே.கே. திரிபாதி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரதீப் குமார் மற்றும் கோவை, திருப்பூர், சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இது ஜே.கே.திரிபாதி, தமிழக டிஜிபியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆய்வுக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version