ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு

ரயில்வே காலிப் பணியிடங்களை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை என ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் உள்ள அரசினர் கலைக்கல்லூரியில் ரயில்வே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, ரயில்வே ஐ.ஜி, வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, தற்போது, அரசுப்பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் படித்தவர்கள் தான், பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் என பெருமையாக தெரிவித்தார். மேலும், ரயில்வே காலிப் பணியிடங்களை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

Exit mobile version