புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்களை தடுக்க வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்- டி.ஜி.பி உத்தரவு

புத்தாண்டை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

புத்தாண்டையொட்டி, அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அனைத்து மாவட்ட காவல்துறைக்கும், முன்னெச்சரிக்கையாக இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு வரை வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

பேருந்து நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனையிட தனியாக போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version