முதலமைச்சர் உடன் டிஜிபி, காவல் ஆணையர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி, முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளருடன் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.

Exit mobile version