சென்னை போலீசாருக்கு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுரை

பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் அமைதியாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீசாருக்கு 

தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுரை வழங்கினார்.சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பதற்கு, தீவிர வாகன சோதனை செய்யப்பட வேண்டும் என்று டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுரை வழங்கினார். எந்தவித அசம்பாவிதமும் இன்றி பொதுமக்கள் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆலோசனைகளை வழங்கினார்.

Exit mobile version