சின்னாளப்பட்டியில் அழகர் வீதி உலா: பக்தர்கள் வழிபாடு

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சின்னாளப்பட்டியில் பல பகுதிகளில் அழகர் வீதி உலா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி தோட்டத்தில் இருந்து அழகர் புறப்பட்டு, வெள்ளியங்கிரி கோயிலுக்கு சென்று, அங்குள்ள ஆற்றில் இறங்கினார். பின்னர் காந்திகிராமம், செட்டியப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் அழகர் வீதி உலா சென்றார்.

முன்னதாக சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவதார கோட்டைக்குச் சென்று, அழகர் தினமும் இரவில் பல்வேறு அவதாரங்கள் எடுத்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Exit mobile version