வசந்த நவராத்திரி நிறைவு விழாவையொட்டி பெண்கள்-குழந்தைகளை தெய்வமாக பாவித்து வழிபாடு

வசந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 9 பெண்களையும் 7 பெண் குழந்தைகளையும் தெய்வமாக பாவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வசந்த நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விழாவின் இறுதி நாளன்று முகாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து ஏழு குழந்தைகளை சப்த கன்னிகளாக பாவித்து அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஒன்பது பெண்களை தெய்வமாக பாவித்து அவர்களுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு பூஜையில் திருவாவடுதுறை ஆதின கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version