தமிழ் புத்தாண்டையொட்டி ஒரே இடத்தில் 10 படை முருகனை வைத்து வழிபாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரே இடத்தில் 10 படை முருகனை வைத்து வழிபாடு நடைபெற்றது.

சென்னை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 படை முருகனை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன்கள், கர்நாடக முருகன், கேரளா முருகன், இலங்கை முருகன், மலேசியா முருகன் ஆகிய பத்து படை முருகனை ஒரே இடத்தில் வைத்து சிறப்பு பூஜைகளும், யாகங்களும் 
செய்யப்பட்டு வருகின்றன.

திருத்தணி, திருசெந்தூர், பழனி, உள்ளிட்ட பத்துப்படை முருகன் சிலைகள் எந்த வடிவமைப்பில் கோவிலில் இருக்கிறதோ அவை ஒரே இடத்தில் இருப்பதை கண்டு ஏராளமான பொதுமக்கள் பக்தியோடு தரிசனம் செய்து வருகின்றனர். 

Exit mobile version