திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருமலை திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையின் காரணமாக, பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வரிசையில் செல்லும் வளாகத்தில் இருக்கும் 31 அரங்குகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டதால், சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ள பக்தர்கள் பூங்காக்களில் தங்கி செல்கின்றனர்.

இதனால் இலவச தரிசனம் வழியாக செல்லும் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பதிந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 4 மணிநேரமும், ஸ்ரீவாரி மலைப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு குறைந்தது 6 மணிநேரமும் ஆகிறது.

Exit mobile version