திருவண்ணாமலையில் தை மாதப் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் தை மாதப் பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சந்திரன் தனது பூரண பலத்துடன் உள்ள நாளான பௌர்ணமி நாளில் சித்தர்கள் ஞானிகள் அருள்வேண்டி பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தை மாதப் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் நடைபெற்றது. 14 கிலோமீட்டர் தூரமுள்ள அண்ணாமலை கிரிவலத்தில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். கிரிவலத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Exit mobile version