மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மதுரை சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரித்துள்ளார். மேலும், நோய் தடுப்பு நடவடிக்கையாக, சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறினார். மேலும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version