தேவேந்திரகுல வேளாளரை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கும் விவகாரம் : பால் குர்ஜார் விளக்கம்

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாகவே எந்த பரிந்துரையும் வரவில்லை என மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கிரிஷான் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்கி, ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் மதுரை வந்த பிரதமர் மோடி, இந்த கோரிக்கை பற்றி தம்மிடமும் தெரிவித்ததாக குறிப்பிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு மற்றும் எஸ்.சி, எஸ்டி. ஆணையத்திடமும் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்நிலையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கிரிஷான் பால் குர்ஜார், இந்த கோரிக்கை குறித்து கடந்த 3 ஆண்டுகளாக தமக்கு எந்த கோரிக்கைகளும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version