இளைஞர்களை ஊக்கப்படுத்தவே பிரியங்கா காந்திக்கு பதவி: ராகுல் காந்தி விளக்கம்

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும், ஏழை எளியோருக்கு சேவை செய்வதற்குமே பிரியங்கா காந்திக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அமிதி தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் பாஜகவை வீழ்த்துவதே மூவரின் இலக்கு என்றும் குறிப்பிட்டார். இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும், ஏழை எளியோருக்கு சேவை செய்வதற்குமே பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதனை பிரியங்கா காந்தி தான் முடிவு செய்வார் எனவும் ராகுல் காந்தி பதிலளித்தார்.

Exit mobile version