கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய துணை காவல் ஆணையர்!!!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர மருத்துவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்கிய நம்பிக்கையே காரணம் என கொரோனா சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பிய துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட துணை காவல் ஆணையர் முத்துசாமி, சிகிச்சைக்குப் பின்னர் பணிக்குத் திரும்பினர். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கை தட்டியும், பூங்கொத்து கொடுத்தும் அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையர் முத்துசாமி, அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தொற்றில் இருந்து விரைவில் குணமடைந்ததற்கு உயர் அதிகாரிகள் அளித்த ஊக்கமும், அன்பும் தான் முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார், மேலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி, மாநகர காவல் ஆணையர் ஆகியோரும், தன்னிடம் நலம் விசாரித்ததாகவும் துணை காவல் ஆணையர் முத்துசாமி தெரிவித்தார்.

Exit mobile version