வாக்கு எண்ணிக்கை குறித்து துணை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சென்னையில் தேர்தல் துணை ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வரும் 19ஆம் தேதியுடன் 17வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி ஒரே நாளில் எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடு பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தமிழகம், கேரளா, குஜராத், யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல் துணை ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்ஹா ஆகியோர் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version