தேசியக் கீதம் பாடி போராட்டத்தை நிறுத்திய காவல் துணை ஆணையர்

பெங்களூரில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் தேசியக் கீதம் பாடி அவர்களைக் கலைந்து போகச் செய்த காவல் துணை ஆணையருக்குப் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பெங்களூர் டவுன் ஹால் முன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு மாநகரக் காவல் துணை ஆணையர் சேத்தன் சிங் ரத்தோர் கேட்டுக்கொண்டார். போராட்டக்காரர்கள் மறுத்ததால், தேசியக் கீதத்தைப் பாடினார். அதற்கு மதிப்பளித்து எழுந்து நின்ற அனைவரும் தேசியக் கீதம் முடிந்ததும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Exit mobile version