தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து துணை முதல்வர் பிரசாரம்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பிரசார பயணத்தின் போது, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக, தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அங்குள்ள டீக்கடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேட்பாளர் சுதீஷ் இருவரும் தேனீர் அருந்தினர். இதையடுத்து, விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரத்தை தொடங்கினார்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிசியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரைத்து வாக்கு சேகரித்த அவர், திமுக ஆட்சியில் கீழ் இருந்து மேல் வரை அனைத்திலும் கட்டபஞ்சாயத்து தான் நடைபெற்றது என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version