துணை முதல்வர், பிரதமர் உள்ள போஸ்டர்களில் அவதூறு வார்த்தைகள் எழுதிய நபர் கைது

தமிழக துணை முதலமைச்சரையும், பிரதமர் மோடியயையும் அவதூறாக சித்தரிக்கும் வகையில் போஸ்டரில் வாசகம் எழுதிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடியில் வசித்து வரும் ஜெய்லானி என்பவர் அப்பகுதியிலுள்ள வழக்கறிஞரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடியின் போஸ்டர்களில் அவதூறு வார்த்தைகள் எழுதியுள்ளார். போஸ்டர்களின் அவதூறு வார்த்தைகளை கண்டு கொந்தளித்த அப்பகுதியை சேர்ந்த பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவதூறு வார்த்தைகளை எழுதியவர் ஜெய்லானி என்பது தெரியவந்தது. அவர்  கைது செய்யப்பட்டு,  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

Exit mobile version