தேனி அதிமுக வேட்பாளருக்கு துணை முதலமைச்சர் வாக்கு சேகரிப்பு

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கம்பத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர், மக்கள் நீதிபதிகளாக இருந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, கொண்டு வரப்பட்ட சட்டமே, ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க வழிவகுத்தது என குறிப்பிட்டார். ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற வழிவகுத்தவர் பிரதமர் மோடி என்றும் புகழாரம் சூட்டினார்.

Exit mobile version