பட்ஜெட் மீதான விவாதம்: துணை முதலமைச்சர் இன்று பதிலளித்து பேசுகிறார்

தமிழக பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலளித்து பேசுகிறார்.

2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 8-ம் தேதி தமிழக நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்த 11-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்தநிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று விவாதத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசவுள்ளார். முன்னதாக, கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

Exit mobile version