திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். 

ஏழுமலையானை தரிசிப்பதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திருமலைக்கு சென்றார். இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்த துணை முதலமைச்சருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வராக சுவாமி ஆலயம் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயத்திலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

Exit mobile version