எஸ்.பி.பி குணமடைய துணை முதலமைச்சர் பிரார்த்தனை!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று, வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்திட வெற்றி உலா வருக அம்மா… வெற்றி உலா வருக என அவர் பாடிய பாடல் ஒலிக்காத மேடை இல்லை எனவும், தமது இனிய குரலால் இசை ரசிகர்களின் இதயங்களை கட்டிபோட்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், அவரது தேமதுரை குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட அவர் பூரண நலம் பெற அன்போடு வாழ்த்துவதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version