திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணிமனையை துணை முதல்வர் திறந்து வைத்தார்

4 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தேர்தல் பணிமனையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடையும் நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இந்நிலையில், தொகுதிக்காக அமைக்கப்பட்டிருக்கும் அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்று துணை முதலமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.

நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடையும் நிலையில், அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிமனையை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், கருப்பணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version