சிறுவாபுரி முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

திருவள்ளூர் அடுத்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்ரமணிய முருகன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், தமிழக மக்கள் நலம் பெற வேண்டியும் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பெரியபாளையத்தில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார்.

Exit mobile version