துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (18.03.2021) பிரசாரம் செய்யும் இடங்கள்!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று(18.03.2021) சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று திருவொற்றியூர் தேரடி பகுதியில் அதிமுக வேட்பாளர்களான திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் கே.குப்பன் மற்றும் மாதவரம் தொகுதி வேட்பாளர் மாதவரம் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

பொன்னேரியில், பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன், கும்மிடிபூண்டி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, திருத்தணி தொகுதி வேட்பாளர் கோ. அரியை ஆதரித்து வாக்கு திரட்டுகிறார்.

அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஆவடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் பாண்டியாரஜன், அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் அலெக்சாண்டர் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து, போரூர் சந்திப்பில் மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின், பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னார் ஆகியோருக்கும் வாக்கு சேகரிக்க உள்ளார்.

Exit mobile version