ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் நாளை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடைபெற்ற கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகளில் அவர் பங்கேற்றார். செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை நடைபெறவுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர்.

Exit mobile version