தேனி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

மக்களவை தேர்தலையொட்டி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் கோவை கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று வரும் 13ஆம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

Exit mobile version