பல்லாவரத்தில் ஆடித் திருவிழாவில் துணை முதல்வர் பங்கேற்பு

பல்லாவரம் அருகே, ஆடித் திருவிழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று நூல்கள் வெளியிட்டார். 

தமிழகம் முழுவதும் ஆடித் திருவிழா, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், பல்லாவரம் அருகேயுள்ள ஸ்ரீதேவி கெங்கை அம்மன் ஆலயத்தில், ஐந்தாம் வார ஆடித்திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மீனாட்சி பதிப்பகம் சார்பில் ஆசிரியர் உதய தீபன் எழுதிய, குடும்ப சிக்கல்களை வெல்லுங்கள் மற்றும் புதிய மனிதர் ஆகுங்கள் என்ற தலைப்பிலான  புத்தகங்களை வெளியிட்டார். இதையடுத்து ஏழை எளிய மக்களுக்கு, சலவை வேட்டி, சேலை போன்ற உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Exit mobile version