புறப்பட்டார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.!

தாஜ் விடுதியில் இருந்து புறப்பட்ட சீன அதிபர் ஷி ஜின்பிங்கைப் பிரதமர் நரேந்திர மோடி வழியனுப்பி வைத்தார். அங்கிருந்து சாலைவழியே காரில் பயணித்துச் சீன அதிபர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அங்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் ஷி ஜின்பிங்கை வழியனுப்பி வைத்தனர். தனி விமானத்தில் ஷி ஜின்பிங் நேபாளத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Exit mobile version