சீட்டு தராததால் கட்சி ஆபீஸில் இருந்த 300 சேர்களை எடுத்து சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல் சத்தார் உள்ளார். அடுத்தமாதம் நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடத்தில் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்காமல் சும்பாஷ் ஜம்பாத் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. இதனால் கோபம் அடைந்த அப்துல் சத்தார், அவுரங்காபாத் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்த 300 சேர்களை தான் அளித்தது என்று கூறி எடுத்து சென்று விட்டார்.

இதன்பின்னர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சேர்கள் இல்லாததால் வேறு வழியின்றி கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து அப்துல் சத்தார் அளித்த பேட்டியில், தான் எடுத்துச் சென்ற 300 சேர்களும் கட்சி கூட்டத்திற்காக சொந்த காசில் வாங்கித் தந்தவை என்றும், தற்போது கட்சியை விட்டு செல்வதால் எனது சேர்களை எடுத்து செல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version