யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரம் : ஜாமீன் வழங்க மறுப்பு

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் போன்றவை மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஜாமின் வழங்ககோரி மாணவர்கள் சார்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்குத் தொடர்பான விவரங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.

Exit mobile version