டெங்கு காய்ச்சல் குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் நெல்லை மாவட்டம் தென்காசியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தென்காசியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி ஒன்றை நடத்தினர். இந்த பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கொசு போன்று வேடமணிந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு முக்கிய வீதிகளில் ஸ்கேட்டிங்கில் பேரணியாக சென்றனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

Exit mobile version