திருச்சியில் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் செயல் விளக்கம்

மின்னணு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் செயல் விளக்கம் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். அதே போல், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, ஆட்சியர் ராசாமணி 50 விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த வாகனத்தில் பயணம் செய்யும் குழுக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பொதுமக்களிடையே செயல்முறை விளக்கம் மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விளக்கம் அளிக்க உள்ளனர்.

Exit mobile version