பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறு : காங்கிரஸ் மூத்ததலைவர் தங்கபாலு

தேர்தல் முடிவுகள் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறு என்பதை மக்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014ஆம் ஆண்டில் போலியான வாக்குறுதியை அளித்து பாஜக ஆட்சிக்கு வந்ததாக கூறினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்று சுட்டிக் காட்டிய தங்கபாலு, தேர்தல் முடிவுகள் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறு என்பதை மக்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு தகுதி இல்லாதவரை நியமித்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

 

Exit mobile version