டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட காரணம் திமுகதான்: விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டதற்கு காரணம் திமுகதான் என டெல்டா பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளித்து தஞ்சாவூரின் திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டதற்கு காரணம் திமுகதான் என அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் காவிரி பிரச்சினையை தூண்டிவிடுவதும், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டதும் திமுகதான் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version