முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்திய டெல்டா விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பிற்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் பெரும் வரவேற்பை அளித்ததோடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வெகுவாக பாராட்டினர். இதனையடுத்து விவசாயத்தை பாதுகாத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் வந்து தானும் ஒரு விவசாயி என்பதை மெய்பித்தார்.

Exit mobile version