டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை

டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், இலுப்பூர் ,ஆலங்குடி, வடகாடு, கந்தர்வகோட்டை,
விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசத்
தொடங்கிய நிலையில் அதிகாலை முதல் இடைவிடாது மழை பெய்துவருகிறது. இதேபோன்று, காட்டுமன்னார் கோயில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. அங்குள்ள அண்ணாமலை நகர், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விடி விடிய மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Exit mobile version