டெல்டா மாவட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்!

மேட்டூர் அணையில் இருந்து கடந்தாண்டு மே மாதம் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர், ஜனவரி 28ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பூதலூர் உள்ளிட்ட இடங்களில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா தாளடி நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட மேட்டூர் அணை தண்ணீரை வரும் 15ம் தேதி வரை மீண்டும் திறக்க வேண்டும் என கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Exit mobile version