சீனாவில் இருந்து இந்தியர்களுடன் டெல்லி வந்தது 2வது சிறப்பு விமானம்

சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து 323 இந்தியர்களுடன் புறப்பட்ட 2வது ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் இக்காய்ச்சலால் 14 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சீனாவின் உஹான் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அந்தந்த நாட்டு அரசு உதவியுடன், சொந்த நாடுகளுக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உஹான் மாகாணத்தில் இருந்து 323 இந்தியர்கள் மற்றும் மாலத்தீவுகளை சேர்ந்த 7 பேருடன், இரண்டாவது ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது. விமானத்தில் வந்த அனைவரும் இந்திய ராணுவம் மற்றும் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version