ஸ்ரேயாஸ் ஐயர் மிரட்டல்; பவுலர்கள் திணறல் – கொல்கத்தாவுக்கு 229ரன் இலக்கு!

டெல்லி – கொல்கத்தா இடையே 16 லீக் போட்டி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, டெல்லிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா இணை துவக்கம் கொடுத்ததுதவான் 5 ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயர் பிரித்விஷாவுடன் கைக்கோர்த்தார்.

இருவரும் இணைந்து அதிரடி காட்ட, இவர்களை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பவுலர்கள் தடுமாறினர். நீண்ட நேரத்துக்குப் பின், 12 ஓவரின் 4வது பந்தில் பிரித்விஷாவை அவுட்டாக்கி வெளியேற்றினார் நாகர்கோட்டி.

ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று அதிரடிக்காட்ட 20 ஓவர் முடிவில் டெல்லி 228 ரன்களை எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ரஸல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்த நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Exit mobile version