வெள்ளக்காடாக காட்சியளிக்கும் டெல்லி புறநகர் பகுதி

டெல்லியில் மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகளில் குளம்போல தண்ணீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான குருகிராம், ஃபரிதாபாத், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடைமழை பெய்து வருகிறது.

இடி, மின்னலுடன் பரவலாக பெய்த கனமழையால், புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ஆங்காங்கே கழிவுநீர் குழாயில் அடைப்பு இருந்ததால் பல இடங்களில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்தது.

சாலைகளில் ஆறுகளை போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேம்பாலத்திற்கு கீழ் சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டன.

தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Exit mobile version