டெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கலவர சம்பவத்துக்கு முன்னரே அவரை இடம் மாற்றம் செய்ய, கொலீஜியம் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி முரளிதர் விசாரித்து வந்தார். அப்போது டெல்லி காவல்துறையின் செயல்பாட்டை அவர் கண்டித்தார். இந்த நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு முரளிதர் பணிமாற்றம் செய்யப்படுவதாக கொலீஜியம் அறிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், கடந்த 12ஆம் தேதியே முரளிதரின் பணிமாற்றம் குறித்து முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பாணையை சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version