விவிஐபிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு : சிபிஐ பதில் அளிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி வெளிநாடு செல்ல அனுமதி கோரிய வழக்கில் வரும் 22ஆம் தேதி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வி.வி.ஐ.பி. க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி வெளிநாடு செல்ல அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக வரும் 22ஆம் தேதி சிபிஐ பதில் அளிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version