டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.

Exit mobile version