ப.சிதம்பரம் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அமைச்சராக இருந்த காலத்தில் விமானங்களுக்கு வழித்தடங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதன் விசாரணைக்கு ஆஜராகுமாறும் சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version