முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் மனு தள்ளுபடி

தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராகேஷ் அஸ்தானா, சிபிஐ டி.எஸ்.பி. தேவேந்திரகுமார் மீது, லஞ்சம் வாங்கியதாக சிபிஐ ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராகேஷ் அஸ்தானா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, ராகேஷ் அஸ்தானாவின் மனு மற்றும் சிபிஐ டி.எஸ்.பி. தேவேந்திரகுமாரின் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Exit mobile version