ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட டெல்லி சுகாதரத்துறை அமைச்சர்!!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா தொற்றின் காரணமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்படுள்ள அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சத்யேந்தர் ஜெயினுக்கு கடந்த 17 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிக காய்ச்சலுடன், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. உயர்தர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, செயற்கை சுவாசத்துடன் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், டெல்லி சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version