டெல்லி மரக்கடைகளில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் உள்ள மர கடைகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான மர சாமான்கள் எரிந்து சாம்பலாகின. டெல்லியின் கிர்டி நகர் பகுதியில் மர சாமான்களுக்கான சந்தை உள்ளது. இங்கு ஏராளமான மரக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு கடையில் நள்ளிரவு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

எளிதில் தீபற்ற கூடிய பொருட்கள் அருகே இருந்ததால் தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த தீ விபத்தில் கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான மர பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Exit mobile version