உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை!

டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. ஒரே நாளில் ஆயிரத்து 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். இது பற்றி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும், டெல்லியில் கொரோனா நிலவரம் பற்றி கேட்டறிந்த அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version